விழுப்புரம் அரசு பேருந்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.! பெரும் அச்சத்தில் தமிழகம்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் அரசு பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவி ஒருவர் விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் புறப்பட்ட பேருந்தில் பயணித்த போது, அந்த பேருந்தின் நடத்துனர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் செல்லக்கூடிய அரசு பேருந்தில், கோனூர் பகுதிக்கு செல்வதற்காக 20 வயதான கல்லூரி மாணவி ஒருவர் பயணம் செய்து உள்ளார். 

அந்த பேருந்தில் அதிக கூட்டம் இல்லாத காரணத்தினால், தனியாக அமர்ந்திருந்த அந்த கல்லூரி மாணவியிடம் இந்த பேருந்து நடத்துனர் சிலம்பரசன் (வயது 32) அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யவும் நடத்துனர் சிலம்பரசன் முயற்சி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், காணை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பேருந்தின் நடத்துனர் சிலம்பரசனை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே திடீர் திருப்பமாக சற்றுமுன் அந்த பேருந்தின் ஓட்டுனரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு பேருந்தில் தனியாக வந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்த சம்பவம், பெண்ணை பெற்ற பெற்றோர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vilupuram govt bus college girl sexual harassment


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->