வான்வழியாக வந்த பெரும் ஆபத்து...! சென்னை விமான நிலையத்தில் சிக்கிய உயர் ரக போதைப்பொருள்...! பின்னணியில் யார்..?
major danger that came by air High grade drugs caught at Chennai airport Who behind it
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளும், வெளிநாடுகளுக்கு புறப்படும் சரக்குகளும் சுங்கத்துறை கண்காணிப்பின் கீழ் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த சோதனைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள், மறைமுகமாக கடத்தப்படும் தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் அடிக்கடி சிக்கி வரும் நிலையில், மீண்டும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.தாய்லாந்தில் இருந்து சென்னை நோக்கி போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் வந்த பயணிகள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட ஒரு பயணியை தனியாக பிரித்து சோதனை செய்தபோது, அவரது உடைமைகளுக்குள் உயர் ரகமான ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சா மறைத்து கொண்டு வரப்பட்டிருந்தது தெரியவந்தது.இதனையடுத்து 6 கிலோ எடையுடைய அந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கஞ்சாவை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டு, இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள வலையமைப்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக சுமார் ரூ.53 லட்சம் மதிப்பிலான தங்கப் பசை வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுங்கத்துறை மேற்கொண்ட ஆய்வில், சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே துபாயில் இருந்து 414 கிராம் தங்கப் பசையை மறைமுகமாக கொண்டு வந்தது அம்பலமானது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.53 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த ஊழியரையும் அதிகாரிகள் கைது செய்து, மேலும் யாரேனும் இந்த கடத்தல் சங்கிலியில் தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
English Summary
major danger that came by air High grade drugs caught at Chennai airport Who behind it