தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இம்மாநாடு ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேதி மாற்றப்பட்டது.

மாநாட்டை மாற்று தேதியில் நடத்துவதற்கான அனுமதி பெற, கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி காவல் துறைக்கு மனு அளித்தார்.

இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் மாநாடு நடைபெறும் இடம், பங்கேற்பாளர் எண்ணிக்கை, தொண்டர்களுக்கான வாகன நிறுத்தம், உணவு மற்றும் குடிநீர் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட 42 அம்சங்களை விவரமாக கேட்டனர்.

தவெக தரப்பில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் வழங்கப்பட்டது. பின்னர், காவல் துறை மாநாடு நடத்த அனுமதி வழங்கியது.

இதுகுறித்து என். ஆனந்த், மதுரையில் நடைபெறவுள்ள தவெக மாநில மாநாட்டிற்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Madurai Manadu Police permission


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->