டன்னுக்கு ரூ.3,151! கரும்புக்கான கொள்முதல் விலை நிர்ணயம் செய்த தமிழ்நாடு அரசு! - Seithipunal
Seithipunal



தமிழ்நாடு அரசு 2024-25 பருவத்திற்கான கரும்பு கொள்முதல் விலையை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.  

அதன்படி, 9.50 சதவீதம் அல்லது அதற்கு குறைவான சர்க்கரை திறன் கொண்ட ஒரு டன் கரும்பின் விலை ரூ.3,151 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

9.85 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,267, 10.10 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,344.20, 10.65 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,532.80 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு முக்கியமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த பருவத்திற்கு கரும்பு விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள், மற்றும் அரசியல் கட்சிகள் ஏற்று கொள்வார்களாக என்பது இனிமேல் தான் தெரியவரும்.

கரும்பு விவசாயிகள், கரும்பின் பயிர்ச் செலவு அதிகரித்துள்ள நிலையில் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Government sugarcane 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->