வீட்டு வாடகை செலுத்தாத சோனியா காந்தி.! கட்சி அலுவலகத்துக்கு மட்டும் ரூ.12.69 லட்சம் பாக்கி.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தனது வீட்டிற்கு வாடகை செலுத்தாமல் இருந்தது, தகவல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான தகவலில் தெரியவந்துள்ளது.

தலைநகர் புதுடெல்லியின், அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் ஜன்பத் சாலையில் அமைந்துள்ள சோனியாகாந்தி வீட்டிற்கு வாடகை செலுத்தவில்லை என தகவல் உரிமை அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சமூக ஆர்வலர் சுஜித் படேல் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி மனு அளித்திருந்தார். இந்த மனுவுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு 12,69,902 ரூபாய் வாடகை பாக்கி உள்ளது என்றும், ஜன்பத் சாலையில் சோனியா வசிக்கக்கூடிய வீட்டிற்கு 4710 ரூபாய் வாடகை பாக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், சோனியாகாந்தியின் தனி செயலர் கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாடகை செலுத்தி உள்ளார். அதில் அவர் அரசுக்கு 5,07,911 ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sonia Gandhi Congress Office Rent


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->