விருப்பு, வெறுப்புகளை விலக்கி ஒன்றிணைவோம் - ஓபிஎஸ் மகன் பரபரப்பு டிவிட்!
Sengottaiyan ADMK Edappadi Palaniswami OPS Son OPR
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை பத்து நாள்களுக்குள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், எடப்பாடி பழனிசாமியின் பிரசாரங்களில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னைச் சேர்ந்த பலரும் மீண்டும் அதிமுகவில் இணைவதற்குத் தயாராக உள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரையும் உடனடியாக ஒருங்கிணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும் என்பது தான் தனது கோரிக்கை. பத்து நாளுக்குள் இந்த முயற்சி தொடங்கப்படாவிட்டால், ஒருங்கிணைப்பு பணிகளை நானே முன்னெடுப்பேன். அதிமுக வளர்ச்சி மற்றும் வலிமைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து முன்னாள் எம்பி.,யும், ஓபிஎஸ் மகனுமான ஓபிஆர் தெரிவிக்கையில், "கழகத்தின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. K.S. செங்கோட்டையன் அவர்களின் கருத்து, ஒவ்வொரு தொண்டனின் அடி மனதில் குவிந்திருக்கும் விருப்பம். இதை நான் ஒரு தொண்டனாக மனதார வரவேற்கிறேன்.
நமது கழகம் வலிமை பெற மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனவுகளை நனவாக்கிட அனைத்து கழக உண்மை தொண்டர்களும் விருப்பு, வெறுப்புகளை விலக்கி ஒன்றிணைவோம்! வென்று காட்டுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Sengottaiyan ADMK Edappadi Palaniswami OPS Son OPR