#BigBreaking: நடிகர் ரஜினிகாந்த் சற்றுமுன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.! கொண்டாட்டத்தில் அரசியல் கட்சி.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்து என்ன முடிவு எடுப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் கவலையில் இருந்த நிலையில் நிரந்தரமாக தனது அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளியை வைப்பதாகவும் தான் அரசியல் கட்சியை துவங்க வில்லை என்றும் திட்டவட்டமாக ரஜினிகாந்த் தெரிவித்து விட்டார். மேலும், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 

இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகி நடிகர் ரஜினியிடம் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி இன்று தனி கட்சி, கோடி உள்ளிட்டவற்றை அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 

"நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சிக்கான பணிகள் உள்ளிட்ட‌ அனைத்தையும் செய்து வந்த அனுபவத்தில் மிக குறுகிய காலத்தில் கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க உள்ளேன். இன்று சென்னையில் எங்கள் கட்சியின் பெயர், கொடி, கொள்கை, உறுதிமொழி ஆகிய‌வற்றை அறிவிக்கிறேன். 

வரும் மார்ச் 1-ம் தேதி கட்சியின் சின்னம் உள்ளிட்டவற்றை வெளியிட இருக்கிறேன். ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 6 மாவட்ட செயலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ரசிகர்களும் எங்களோடு கைகோத்துள்ளனர். எந்த பெரிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை. 234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிட உள்ளோம்" என்று அர்ஜுனமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சற்றுமுன் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று தனி அரசியல் கட்சி துவங்கியிருக்கும் அர்ஜுனன் மூர்த்தி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்" என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RAJINI Statement feb 27


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->