ஆந்திராவில் பரபரப்பு - அரசியல் கட்சியினரிடையே மோதல் - பொதுமக்கள் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் பரபரப்பு - அரசியல் கட்சியினரிடையே மோதல் - பொதுமக்கள் படுகாயம்.!

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நாரா லோகேஷ் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரை 205-வது நாளை எட்டியுள்ள நிலையில், அவர் பீமாவரம் தொகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கட்சியினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர் அங்கு பேசிய நாரா லோகேஷ், ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நாரா லோகேஷிற்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர், ஒய்.எல்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.  பதிலுக்கு அவர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அந்த இடமே போர்க்களம் போன்று காட்சி அளித்தது. 

உடனே பாதுகாப்பு போலீசார் அவர்களைத் தடுக்க முயன்ற போது, ​​அவர்கள் மீதும் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில், காவல்துறையினர் மூன்று பேர் மற்றும் பொதுமக்கள் பலரும் காயம் அடைந்தனர். 

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public peoples injured for political parties clash in andira


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->