காவல் நிலையத்தில் ஆஜரான எம்.எல்.ஏ. பூவை ஜெகன் மூர்த்தி - Seithipunal
Seithipunal


காதல் தொடர்பான பிரச்சினையில் சிறுவன் கடத்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திருவாலங்காடு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. பூவை ஜெகன் மூர்த்தி, இன்று காவல்நிலையத்தில் நேரில் வந்தார்.

முன்னதாக, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதன்பேரில், வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என நீதிமன்றம் அவருக்கு கட்டுப்பாடுகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அதற்கிணங்கவே, ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல்நிலையத்தில் ஆஜராகி, போலீசாரின் விசாரணைக்கு நேரில் பதிலளிக்கத் தொடங்கியுள்ளார். அவரது பதில்கள் மற்றும் பங்கு தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

poovai jagan moorthy MLA Abduction Case


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->