80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
Police apprehend the youth who raped an 80 year old grandmother
மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய வாலிபர் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள மு பேரை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு வந்த4 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த மூதாட்டியை தாக்கி அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் மூதாட்டி அணிந்திருந்த ¾ பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது. அப்போது காயமடைந்து கிடந்த மூதாட்டியை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வந்தனர்.இந்த நிலையில், தகவலின் பேரில் காடாம்புலியூரில் உள்ள முந்திரி காட்டுக்கு சென்ற போலீசார் சுந்தரவேலை சுற்றி வளைத்தனர். அப்போது வாலிபர் சக போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை சுதாரித்துக்கொண்ட பண்ருட்டி ஆய்வாளர் வேலுமணி துப்பாக்கியால் சுந்தரவேலின் காலில் சுட்டார். இதில் அவரது இடது காலில் குண்டு பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து சுந்தரவேலை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். மேலும் சுந்தரவேல் தாக்கியதில் காயமடைந்த 2 போலீசாரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்களை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
Police apprehend the youth who raped an 80 year old grandmother