"வங்காளத்தில் மம்தா அரசுக்குக் 'கவுண்டவுன்' தொடங்கிவிட்டது!": கொல்கத்தாவில் பிரதமர் மோடி ஆவேசம்!
PM Modi Slams TMC in Kolkata Accuses Mamata Govt of Protecting Infiltrators and Hitting Constitutional Bodies
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டப் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) அரசுக்கு எதிரான தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
ஊடுருவலும் மக்கள் தொகை மாற்றமும்:
வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகளைச் சரிசெய்ய மம்தா அரசு முட்டுக்கட்டை போடுவதாகப் பிரதமர் குற்றம் சாட்டினார். "ஊடுருவல்காரர்களின் பெயர்களை நீக்காமல் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்த முடியாது. தனது அரசியல் ஆதாயத்திற்காகப் பல பகுதிகளில் இந்துக்களைச் சிறுபான்மையினராக்கும் நோக்கில் திரிணாமுல் காங்கிரஸ் செயல்படுகிறது" என அவர் சாடினார். மேலும், பாதிக்கப்பட்ட இந்து அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதை வாக்கு வங்கி அரசியலுக்காகத் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.
சட்டம்-ஒழுங்கு மற்றும் ஊழல் புகார்:
மேற்கு வங்க அரசு ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளின் பிடியில் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், மிரட்டிப் பணம் பறிப்பதே அவர்களின் முக்கிய வருமானமாக உள்ளது என்றார். "இந்த ஊடுருவல் மற்றும் குற்றக்கும்பல்களால் வங்காளத்தின் நிலம், வாழ்வாதாரம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது" என எச்சரித்தார்.
அரசியலமைப்பு நிறுவனங்கள் மீதான தாக்குதல்:
தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட நிறுவனங்களைத் திரிணாமுல் காங்கிரஸ் தாக்குவது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்ட மோடி:
"வங்காளத்தில் நிலவும் ரவுடித்தனமான நாட்கள் முடிவுக்கு வரப்போகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது" என அதிரடியாக முழங்கினார்.
English Summary
PM Modi Slams TMC in Kolkata Accuses Mamata Govt of Protecting Infiltrators and Hitting Constitutional Bodies