#திடீர்திருப்பம் | கொலை வழக்கில் கைதான திமுக எம்பி ரமேஷுக்கு சற்றுமுன் நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில் கடலூர் திமுக எம்.பி ரமேஷ்-க்கு சொந்தமான முந்திரி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணியாற்றிய மேல் மாம்பட்டை கோவிந்தராசு என்பவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்தப் படுகொலைக்கு காரணம் திமுக எம்பி ரமேஷ் மற்றும் சிலர் கோவிந்தராசுவை தாக்கியது தான் என்று, அந்த ஆலை ஊழியர்களும், கோவிந்தராசுவின் உறவினர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட கோவிந்தராசு அவர்களின் மகன் செந்தில்வேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார்.

இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ்.,வின் பிரேத பரிசோதனையில், அவரின் பின் மண்டை உடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியது.

இதனையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு, இந்த வழக்கு சம்பந்தமாக முதல்கட்டமாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது நீதிபதிகள் அவரை இரண்டு நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டனர்.

இன்றுடன் இரண்டு நாள் நீதிமன்ற காவல் முடிந்து திமுக எம்பி ரமேஷ் கடலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிசிஐடி போலீசார் தரப்பில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு அளித்தனர். இதனை விசாரணை மேற்கொண்ட நீதிபதி அவர்கள், அவரை ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து அவரை ௫ மணி நேரம் விசாரணை செய்த சிபிசிஐடி போலீசார் சற்றுமுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி அவர்கள், வரும் அக்டொபர் 27 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

oct 27 jail for dmk mp ramesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->