சாமியாத்தாள் குத்திப் படுகொலை! பெரும் அச்சத்தில் மக்கள் - அதிர்ச்சியில் அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற தாயார், கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 

ஏற்கனவே இது போன்ற குற்றங்களுக்காக, சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், மறுபடியும், தனியாக வசித்து வரும் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்வது, பலத்த கேள்விகளை எழுப்புகிறது.

உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மேலும் இது போன்ற குற்றங்கள் தொடராமல் தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும்" என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Namakkal Olda lady murder case


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->