மதுரை விமான நிலையத்திற்கு தேவேந்திரன், மீனாட்சி எனப் பெயர்.! நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெளியான அதிரடி தகவல்.! - Seithipunal
Seithipunal


மதுரையிலுள்ள விமான நிலையத்திற்கு தேவேந்திரன் அல்லது மீனாட்சி என்ற பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரையிலுள்ள விமான நிலையம், பேருந்து நிலையங்களுக்கு தங்களுக்கு பிடித்த தலைவர்களின் பெயரை வைக்க வேண்டும் என்ற சமுதாயங்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதேபோல் மதுரை விமான நிலையத்திற்கு தேவேந்திரன் அல்லது மீனாட்சி என பெயர் சூட்ட கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் முன்பு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு முக்கிய தகவலை தெரிவித்தார். அவர் அளித்த தகவலின்படி, மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது பற்றி தமிழ்நாடு அரசு எந்த பரிந்துரையும் எங்களுக்கு அனுப்பவில்லை.

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் தான் மதுரை விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள் இதுபோன்ற வழக்குகளை ஊக்கப்படுத்த முடியாது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai airport name issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->