அடுத்த அதிர்ச்சி..! ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்!
jharkhand minister ramdas sorens death
ஜார்கண்ட் மாநில கல்வி மற்றும் பதிவுத்துறை அமைச்சரான ராம்தாஸ் சோரன் (62), உடல்நலக்குறைவால் தில்லியில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது மறைவை முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மகன் சோமேஷ் சோரன் உறுதிப்படுத்தினர்.
சமீபத்தில் வீட்டில் குளியலறையில் தவறி விழுந்ததில் ராம்தாஸ் சோரன் தலையில் கடுமையான காயம் அடைந்தார். இதையடுத்து அவர் முதலில் ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா மோட்டார்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேம்பட்ட சிகிச்சைக்காக சிறப்பு ஏற்பாடுகளுடன் விமானம் மூலம் தில்லி கொண்டு வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு தொடர்ந்து உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் நிலைமை மோசமடைந்து அவர் காலமானார்.
அவரது உடல் சனிக்கிழமை காலை ராஞ்சிக்கு கொண்டு வரப்பட்டு, காலை 9 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் பொதுமக்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கத்சிலா தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றிய ராம்தாஸ் சோரன், எளிமை மற்றும் மக்களுடன் நெருக்கமாக பழகிய பண்புக்காக அறியப்பட்டார். 1980ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த அவர், தொடர்ந்து கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பட்டு வந்தார். அவரது மறைவு ஜார்கண்ட் அரசியல் வட்டாரத்தில் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
English Summary
jharkhand minister ramdas sorens death