அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவாரா? எடப்பாடி தரப்பில் அதிகாரபூர்வ பேட்டி.! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டிஜிபி இடம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.

மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில். "அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 2665 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

 கடந்த முறை அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பாதுகாப்பு தர காவல்துறை தவறிவிட்டது.

கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை நடக்கும் பொதுக்குழு கூட்டத்துக்கு உரிய பாதுகாப்பை தமிழக போலீஸ் வழங்க வேண்டும். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். 

நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு சமூக விரோதிகளால் ஆபத்து ஏற்படலாம். எனவே போலீசார் முறையான ஒரு பாதுகாப்பை அளிக்க வேண்டும். 

கடந்த முறை வாகன நெரிசல் உள்ளிட்ட பல்வேறு விரும்பத் தகாத செயல்கள் அரங்கேறின. அது போல் இல்லாமல் இந்த முறை முழுமையாக பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

மேலும், செய்தியாளர்கள் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார்,

"கட்சி விதிமுறைகளை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தொண்டனுக்கு ஒரு விதி, நிர்வாகிகளுக்கு ஒரு விதி என தனித்தனியாக எதுவும் இல்லை. நடவடிக்கை நிச்சயம் உண்டு. அது என்ன நடவடிக்கை என்பதை நான் சொல்ல முடியாது தலைமைதான் முடிவெடுக்கும்" என்று ஜெயக்குமார் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeyakumar say about ops dismiss in admk question


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->