நாசர் என்ற பூனை குட்டி 5 லட்சம் லிட்டர் பால் குடித்துள்ளது - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,

"விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்து சர்க்காரியா கமிஷனால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்கள் அவர்கள். விஞ்ஞான முறையில் ஊழல் செய்வது இவர்களுக்கு கைவந்த கலை.

குறிப்பாக திமுக அமைச்சர் நாசர் அவர்கள் தன்னுடைய முன்னோர்கள் காட்டிக் கொடுத்த விஞ்ஞான முறைகளான ஊழல் முறைகள் மூலம் பால் பாக்கெட்டில் இருக்கின்ற பாலை திருடி (குறைத்து) அதன் மூலம் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்.

உதாரணத்திற்கு ஒரு நாளைக்கு மட்டும் ஆவின் நிறுவனம் 37 லட்சம் லிட்டர் பால் தமிழ்நாடு முழுவதும் விற்பனை ஆகிறது. அந்த 37 லட்சம் லிட்டரில் தினந்தோறும் ஐந்து லட்சம் லிட்டர் நாசர் என்கின்ற பூனைக்குட்டி குடித்திருக்கிறது.

நாசர் என்ற அந்த பூனை குட்டி ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் லிட்டர் பால் குடித்துள்ளது. அதன் விலை எவ்வளவு?

முதலமைச்சர் ஸ்டாலின் அவருடைய தந்தையாருக்கு ஊர் முழுவதும் சிலை வைத்து, அரசின் பணத்தை காலி செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால், கடலில் பேனா சிலை வைப்பதால் மீனவர்கள் உண்மையிலேயே பாதிக்கப்படுவார்கள்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeyakumar say about aavin milk issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->