கரூர் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சகோதரி வீட்டில் 2வது நாளாக ஐ.டி ரெய்டு.!!
Itraid continue 2nd day in Karur DMK former district secretary sister
தமிழ்நாடு பொது பணித்துறை அமைச்சர் எ.வ வேலு தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்திலும் நேற்று காலை 6:30 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீட்டில் 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே போன்று சுரேஷ் என்பவரின் வீடு மற்றும் ஃபைனான்ஸ் நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலும் 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேவேளையில் நேற்று காலை முதல் பேரூராட்சி திமுக முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் என்பவரின் வீட்டில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை மட்டும் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Itraid continue 2nd day in Karur DMK former district secretary sister