தமிழ்நாடு என பெயர் சூட்டியதே திமுக அரசுதான்; யாரும் பாடம் எடுக்க வேண்டாம்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி..! - Seithipunal
Seithipunal


2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் தான் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் நீக்கப்பட்டதாக  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயரை தற்போது நீக்கியதாக சிலர் சர்ச்சையை கிளப்புகின்றனர். இந்தப் பெயர் மாற்றம் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சிக் காலத்திலேயே,  நடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் பேருந்தின் முன்பக்கத்தில் ‘அரசுப் போக்குவரத்து கழகம்’ என்று மட்டுமே பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், திருநெல்வேலி’ என்று முழுமையாக எழுதும்போது, பெயர் நீளமாகவும், படிக்கக் வசதியாக இல்லை என்று கூறி அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பழைய பேருந்துகள் இன்னும் ஓடிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் பரவி  வரும் நிலையில், முதலமைச்சர் பல புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்துள்ள்ளார். மேலும், பல புதிய பேருந்துகளை விரைவில் கொண்டுவர இருப்பதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களிலும் தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றதாகவும், தமிழ்நாடு என பெயர் சூட்டியதே திமுக அரசுதான் என்றும், யாரும் பாடம் எடுக்க வேண்டாம் என அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It was the DMK government that named it Tamil Nadu Minister Sivashankar says no one should take a lesson from it


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->