எனக்கு தெரியாமலே ரீரிலீஸ் பண்ணிருக்காங்க - அம்பிகாபதி பட இயக்குனர் வருத்தம்.!!
director anand l rai speech about ambikapathy movie re release
இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அம்பிகாபதி. இந்தப்படத்தின் மூலம் தனுஷ் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்தத் திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொண்டார். இந்த நிலையில் அம்பிகாபதி திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், படத்தை மீண்டும் நேற்று ரீரிலீஸ் செய்தனர்.
ஆனால், படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றி ரீரிலீஸ் செய்துள்ளனர். இந்தக் கிளைமேக்சில் தனுஷ் கடைசியாக உயிர் பெற்று வருவதுப் போல் காட்சிகள் அமைந்துள்ளது.
இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. இதுக்குறித்து இயக்குனர் ஆனந்த் எல் ராய் தெரிவித்துள்ளதாவது:- "அம்பிகாபதி படத்தை என்னிடம் கூறாமலே தயாரிப்பு நிறுவனம் ரீரிலீஸ் செய்துள்ளது. அந்த கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியதில் எனக்கு உடன்பாடில்லை. என்னுடைய ஒரு படைப்பை எடுத்து அவமரியாதை செய்துள்ளனர். இந்த செயலை ஒரு துரோகமாக கருதிகிறேன்" என்று தெரிவித்தார்.
English Summary
director anand l rai speech about ambikapathy movie re release