இந்தாண்டுக்கான சுதந்திர தின விழாவையொட்டி மூவர்ண கொடி யாத்திரை: பாஜக​வில் மாநில அளவி​லான குழுவை நியமித்துள்ள நயினார் நாகேந்திரன்..! - Seithipunal
Seithipunal


இந்​தாண்டு (2025) சுதந்​திர தினத்​தையொட்டி பல்​வேறு நிகழ்ச்​சிகளை நடத்த பாஜக தேசிய தலை​வர் ஜெ.பி.நட்டா அறி​வுறுத்​தி​யுள்​ளார். அதன்​படி, மூவர்ண கொடியாத்​திரை (திரங்கா), வீடு​தோறும் தேசி​யக் கொடி ஏற்​று​தல் மற்​றும் தூய்​மைப் பணி​களை மேற்​கொள்​ளுதல் என பல்​வேறு நிகழ்ச்​சிகள் ஆக.10-ஆம் தேதி முதல் நடத்த அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

அதன்படி, இந்த மூவர்​ணக் கொடி யாத்​திரை மற்​றும் இதர பணி​களை ஒருங்​கிணைக்க தமிழக பாஜக​வில் மாநில அளவி​லான குழுவை நயி​னார் நாகேந்​திரன் நியமித்​துள்​ளார்.

தமிழகத்​தில் மூவர்​ணக் கொடி யாத்திரை உள்​ ளிட்ட பணி​களை ஒருங்​கிணைக்​க​வும், வழி நடத்​த​வும் மாநில பொதுச் செய​லா​ளர் ஏ.பி.​முரு​கானந்​தம் தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. அந்த குழு​வில், மாநிலச் செய​லா​ளர் அமர்​பிர​சாத் ரெட்​டி, இளைஞர் அணி தலை​வர் எஸ்​.ஜி.சூர்​யா, மகளிர் அணி தலை​வர் கவிதா ​காந்த், ஓபிசி அணி தலை​வர் வீர திரு​நாவுக்​கரசு, முன்​னாள் மாவட்ட தலை​வர்​கள் சுரேஷ்​பாபு, மகாசுசீந்​திரன், தென்​காசி மாவட்ட அமைப்​பாளர் மகா​ராஜன் ஆகியோர் செயல்​படு​வார்​கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nainar Nagendran has appointed a state-level committee in the BJP for the tricolor flag procession on the occasion of Independence Day celebrations


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->