BigBreaking : புயல் உருவாகியது., சிக்கியது தமிழகத்தில் ஒரு மாவட்டம்.! சற்றுமுன் இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிவிப்பு.!
imd report nov 30
வங்கக் கடலில் மீண்டும் புயல் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மீண்டும் புயல் உருவாகிறது என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
வங்கக்கடலில் தற்போது நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கன்னியாகுமரியில் இருந்து 1150 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
புதிதாக உருவாகும் புயல் வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி மாலை இலங்கை கடற் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 805 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 1150 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது புயலாக உருவானால் இலங்கையை கடந்து தமிழகத்தைக் கடந்து கேரளாவின் அரபிக்கடல் கடற்கரையில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்கள் 2 ஆம் தேதிகளில் அதிக கனமழை வாய்ப்புள்ளது. தென் பகுதிகளில் பல இடங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்ற மாவட்டங்களில் மிகுந்த கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.