விடிய விடிய விசாரணை- பயங்கர எதிர்பார்ப்பிற்கு மத்தியில் சந்திர பாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்.! - Seithipunal
Seithipunal


விடிய விடிய விசாரணை- பயங்கர எதிர்பார்ப்பிற்கு மத்தியில் சந்திர பாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்.!

நேற்று ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை ஊழல் வழக்கில் சிஐடி போலீசார் கைது செய்தனர். 

அவரை சிஐடி அதிகாரிகள் தங்களது அலுவலகத்தில் வைத்து சுமார் பத்து மணி நேரம் விசாரணை நடத்தி இன்று அதிகாலை 3.15 மணிக்கு சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

அங்கு அவருக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதன் பிறகு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கிடையே, தெலுங்குதேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் பட்டாபி ராம் கொம்மரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு மனைவி நாரா புவனேஸ்வரி ஏற்கனவே நீதிமன்றத்தில் தயாராக இருப்பதாகவும், வழக்கறிஞர்களும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ex formar cm sandirababu naidu appeared in court


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->