நயினார் தோற்க வேண்டும்... நெல்லை நிர்வாகிகளுக்கு வார்னிங் கொடுத்த திமுக தலைவர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளை சட்டமன்றத் தொகுதி வாரியாகச் சந்தித்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.

சமீபத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் மற்றும் திருநெல்வேலி சட்டசபை தொகுதிகளுக்கான திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் தனிப்பட்ட ஆலோசனை நடத்தினார். இதில் தெற்கு மண்டல பொறுப்பாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் கலந்து கொண்டார்.

இந்த ஆலோசனையின் போது, வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் முழு ஆற்றலுடன் பணியாற்ற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். குறிப்பாக திருநெல்வேலி தொகுதியில் கட்சியின் வெற்றி அவசியம் என்றும், அந்தத் தொகுதி திமுக கைக்குச் செல்ல வேண்டியது முக்கிய குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், திருநெல்வேலி தொகுதியில் கட்சி தோல்வியடைந்தால், அந்தப் பகுதிக்கான நிர்வாகிகளின் பொறுப்புகள் பறிக்கப்படும் எனவும் ஸ்டாலின் எச்சரித்தார். தேர்தல் வெற்றி கட்சியின் கண்ணியத்துடன் நேரடியாக தொடர்புடையது என்பதையும் அவர் நினைவூட்டினார்.

தற்போது திருநெல்வேலி சட்டசபை தொகுதியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். இந்த சூழலில், திமுக மீண்டும் அந்தத் தொகுதியை கைப்பற்ற முயற்சி தீவிரமடைந்துள்ளது. கட்சியின் அடித்தளத்திலிருந்து மேல்நிலைகள் வரை ஒருங்கிணைந்த பணியாற்ற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

election 2026 DMK MK Stalin nellai bjp nayinar


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->