பாமக தி.கோ.மருதாச்சலம் மறைவு - டாக்டர் இராமதாஸ் இரங்கல்! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தி.கோ.மருதாச்சலம் மறைவுக்கு, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் அந்த இரங்கல் செய்தியில், "விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம் கிராமம் என்கிற திருமுண்டீஸ்வரத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தி.கோ.மருதாச்சலம் உடல்நலக்  குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மருதாச்சலம் அவருடைய இளம் வயதிலிருந்தே பா.ம.க.வில் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர். 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பா.ம.க.வினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Mourning to Maruthachalam death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->