திமுக வாய் கூசாமல் பச்சை பொய்யை சொல்கிறது...! கோயபல்ஸையே மிஞ்சி விட்டனர்...! - எடப்பாடி பழனிச்சாமி
DMK telling lie without any hesitation They have surpassed Goebbels Edappadi Palaniswami
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ''எடப்பாடி பழனிசாமி'','அதிமுகதான் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியது' என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருப்பதாவது,"தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50%-ஆக உயர்த்தும் சட்டத்தை 20.02.2016 அன்று நிறைவேற்றியது மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்ட
ஒரு சட்டத்தில் கூட வாய் கூசாமல் பச்சைப்பொய்யை திமுக சொல்கிறது என்றால், இந்த கொத்தடிமைகள் கோயபல்ஸையே மிஞ்சிவிட்டனர்!
பொய்யாலும், போலி விளம்பரத்தாலும் மட்டுமே நடக்கும் இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு, இந்த பச்சைப்பொய்யும் சாட்சி! நாசமாய்போன நான்காண்டு முடியட்டும் இதோடு! " என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
English Summary
DMK telling lie without any hesitation They have surpassed Goebbels Edappadi Palaniswami