மழையின் அளவு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1200 கன அடியாக குறைந்துள்ளது...!
Due decrease rainfall water flow Okenakkal has decreased to 1200 cubic feet
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து, கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

நேற்று நீர்வரத்து 1500 கன அடியாக இருந்து வந்தது நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் கன அடியின் அளவு சற்று குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1,200 கனஅடியாக நீர்வரத்து குறைந்து வந்தது.
மேலும், மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.கூடுதலாக, சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
அதுமட்டுமின்றி,தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
இதில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Due decrease rainfall water flow Okenakkal has decreased to 1200 cubic feet