வசமாக சிக்கிய அமைச்சர் சிவசங்கர்! லிஃப்டில் கால் மணிநேர போராட்டம்! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிஃப்ட் பழுதானதால், அமைச்சர் சிவசங்கர் லிஃப்டில் சுமார் 15 நிமிடம் சிக்கி கொண்டார்.

அமைச்சர் சிவசங்கர் லிஃப்டில் ஏறி முதல் தளத்துக்கு சென்ற போது, லிஃப்ட் பழுதாகி வழியில் நின்றது.

சுமார் 15 நிமிடம் அமைச்சர் லிஃப்டில் சிக்கி கொண்டார். பின்னர் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அமைச்சரை மீட்டனர். இதனால் சிறிது நேரம் பராபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு சென்ற போது, மூன்றாவது தளத்திலிருந்து தரை தளத்திற்கு லிஃப்ட் மூலம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று லிஃப்ட் பழுதாகி பாதியிலிலேயே நின்றது. பின்னர் ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister Sivasankar Perambalur Lift


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->