செந்தில் பாலாஜியின் ஜமீனை ரத்து பண்ணுங்க! உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது அமலாக்கத் துறை அதிகாரிகளால் செய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து 472 நாட்கள் கழித்து 2024 செப்டம்பர் 26-ம் தேதி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். 

தொடர்ந்து ஒரு நாள் கழித்து மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டு, மறுநாள் அமைச்சராக செய்தில் பாலாஜி பதவியேற்றார்.  

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அமலாக்க துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் நிபந்தனைகளை மீறுவதாகவும், விசாரணையை தாமதப்படுத்துவதற்கான உத்திகளைக் கையாள்வதாகவும் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளது.

முன்னதாக செந்தில்பாலாஜியால் பாதிக்கப்பட்ட வித்யாகுமார் என்பவர், செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள், “200 அரசு பணியாளர்கள் சாட்சிகளாக இருக்கும்போது, அவர் அமைச்சராக தொடர்வது எவ்வாறு சரியாகும்?” எனக் கேள்வி எழுப்பினர். மேலும், "செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை பிடித்துக் கொள்ள என்ன அவசரம்? சாட்சிகள் அவருக்கு எதிராக வெளிப்படையாக சாட்சியம் அளிக்க முடியுமா?" என சந்தேகம் தெரிவித்தனர்.  

அமலாக்கத் துறையும், முக்கிய சாட்சி ஒருவரின் ஆஜர் தாமதம் குறித்து நீதிமன்றத்தில் வாதாடியது. இதையடுத்து, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை விரும்புகிறாரா என்பதை தமிழக அரசு  தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்க்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Minister Senthilbalaji bail case ED SC


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->