ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம் - திமுக அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இந்துக்கள் விரும்பும் கடவுளை வழிபட அனைத்து சுதந்திரமும் தமிழ்நாட்டில் உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தெரிவித்ததாவது,

தமிழகத்தில் பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தலையிடாது. கடவுளை வழிபட அனைத்து சுதந்திரமும் தமிழகத்தில் உள்ளது.

ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக்கொள்வோம்.

கோவிந்தா கோவிந்தா என்றாலும் ஏற்றுக்கொள்வோம், ஓம் முருகா என்றாலும் ஏற்றுக்கொள்வோம்.

முருகன் மாநாடு பொதுவானது- மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை வரவேற்கிறோம்.

இதையே வரவேற்பாக ஏற்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்கலாம்.

முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் மாநாட்டில் பங்கேற்பார்கள்.மாநாட்டில் முதல்வர் பங்கேற்பது ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும்" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK minister Sekar Babu say about Hindu God


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->