அசத்தல்! முதலமைச்சர் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் துவங்கியது...! - Seithipunal
Seithipunal


தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இருந்தாலும் மதுரையில், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்றது.

மேலும், சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில், மதுரை உத்தங்குடியில் 90 ஏக்கர் நிலத்தில், அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன்,100 அடி உயரத்தில் கொடிக்கம்பமும் நிறுவப்பட்டு, வண்ணமலர்களுடன் செயற்கை நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்றனர். இது 47 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் நிர்வாகிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தி.மு.க. கூட்டத்தில் 3400 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK general committee meeting has begun under leadership Chief Minister


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->