திமுகவிடம் வாங்கிய காசில் டீ கூட குடிக்கவில்லை - மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் தலைவர் விளக்கம்!
DMK CPIM Alliance ADMK EPS
2019ஆம் ஆண்டு திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்து தேர்தலில் போட்டியிட்ட போது, செலவுக்காக அவர்கள் கொடுத்த தொகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாக பயன்படுத்தியதாகவும், அதில் எந்த மறைமுகத்துவமும் இல்லையெனவும் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அந்த தொகை முழுவதும் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டு, வருமான வரித்துறையின் கணக்கிலும் காட்டப்பட்டது. அதிலிருந்து ஒரே ஒரு டீ கூட எங்கள் தொண்டர்கள் குடிக்கவில்லை” என்றார்.
அதே நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மேற்கொண்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் பதிலளித்த சண்முகம், “பழனிசாமி முதல்வராக இருந்தபோதும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதிலும், மத்திய பாஜக அரசு மேற்கொள்ளும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் நிலைமையில் இருக்கிறார். மோடி, அமித்ஷா ஆட்டுவிக்கும் தலையாட்டி பொம்மையைப் போல் நடக்கிறார்” என்றார்.
கம்யூனிஸ்டுகள் போராடவில்லை என பழனிசாமி கூறுவதைத் அரசியல் நோக்கங்களுக்காக கூறப்படும் வெறும் வேடிக்கையான விமர்சனமாக சுட்டிக்காட்டிய அவர், “மக்களை பாதிக்கும் எந்த தீர்மானத்தையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்தாலும், அதனை எதிர்த்து போராடுவதில் எங்களது கட்சி எப்போதும் முன்னிலையாக உள்ளது” என்றார்.
English Summary
DMK CPIM Alliance ADMK EPS