த.வெ.க.வுடன் கூட்டணியா? தி.மு.க.வுடன் கூட்டணியா? நாகரிகம் கருதி வெளியிடாமல் இருக்கோம் - பிரேமலதா பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தநிலையில், தே.மு.தி.க.வும் எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது.

இன்று முதல் நான்கு நாட்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை என இரண்டு சுற்றுகளாக கூட்டங்கள் நடைபெறுகின்றன.

முதல் நாளான இன்று, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.-க்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அந்த வாய்ப்பு தரப்படாததால், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. இதனால், தே.மு.தி.க. கூட்டணியில் நீடிக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், தே.மு.தி.க.பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "தேவையெனில் 2026 தேர்தலில் தனித்து போட்டியிட தயார்

கூட்டணி குறித்து முடிவு எடுக்க இன்னும் நேரம் தேவை. ராஜ்ய சபா சீட் அதிமுக வழங்குவது தொடர்பான ஆவணத்தை நாகரிகம் கருதி வெளியடவில்லை

தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என்பதைக் கேட்பது தி.மு.தி.க.விடம் தான். இதேபோல் த.வெ.க.வுடன் கூட்டணியா என்பது விஜய் முடிவெடுக்கும் விஷயம்

தி.மு.தி.க. அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு "காலம் தான் பதில் சொல்லும்" என்று தெரிவித்துள்ளார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMDK premalatha vijayakanth Alliance DMK ADMK BJP TVK


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->