நூதன போராட்டம்!கை விளங்குடன் டீக்கடை நடத்தும் கணவர்! மாமனார் வீட்டு அருகே...
unique struggle A husband who runs a tea shop with his bare hands Near his fatherinlaws house
மத்தியபிரதேச மாநிலத்தில் தன் மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்த மனைவிக்கு எதிராக, நூதன முறையில் தனது மாமனார் வீட்டருகே டீக்கடை திறந்து கணவர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.மத்திய பிரதேசத்தில் 'கிருஷ்ண குமார்' என்பவர், 2018 இல் மீனாட்சி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் சேர்ந்து தேனீ வளர்ப்புத் தொழிலைத் தொடங்கி நடத்தி வந்தனர்.ஆனால் 2022 ஆம் ஆண்டில், கிருஷ்ணாவை விட்டு பிரிந்து சென்ற அவரது மனைவி, கணவர் மீது வரதட்சணை கொடுமை புகாரளித்தார்.இந்த நிலையில், கிருஷ்ண குமார் அவரது மாமனார் வீட்டருகே 498A என்ற பெயரில் டீக்கடை ஒன்றை திறந்து வியாபாரம் தொடங்கியுள்ளார்.
இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைவிலங்கு அணிந்துகொண்டே அவர் தேநீர் விற்பனை செய்கிறார். IPC 498A கீழ் இவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதால், அந்தப் பெயரையே கடைக்கு வைத்து போராட்டம் நடத்தி வருவதாக கிருஷ்ண குமார் தெரிவித்தார்.மேலும் இந்த டீக்கடையில் "எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்" என்ற வாசகமுள்ள பதாகைகள் மற்றும் போஸ்டர்களை அவர் வைத்துள்ளார்.
இது இணையத்தில் கிருஷ்ண குமாரின் டீக்கடை வைரலாகியுள்ளது.இப்புகார் தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, "என் மனைவி கொடுத்த பொய் வழக்கால் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது. கடந்த 3 வருடங்களாக, நீதிக்காக நீதிமன்றத்தில் நான் அலைந்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு வயதான தாய் இருக்கிறார்.
அவருக்காக தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.அதே சமயம் இது தொடர்பாக பேசிய அவரது மனைவி, " நிலம் வாங்க என் தந்தையிடம் என் கணவர் பணம் கேட்டார். அவர் பணம் தர மறுத்தபோது, அவர் என்னை அடித்தார். அதன் பின்னர் நான் என் தந்தையின் வீட்டிற்கு வந்துவிட்டேன். நான் விவாகரத்துக்கு தயாராக இருக்கிறேன், ஆனால் அதற்கு முதலில், என் பெயரில் அவர் வாங்கிய அனைத்து கடன்களையும் திருப்பி கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
unique struggle A husband who runs a tea shop with his bare hands Near his fatherinlaws house