முதல்வர் ஸ்டாலினை வேதனையில் ஆழ்த்திய கடலூர் இளைஞரின் மரணம்! - Seithipunal
Seithipunal


கடலூர்: பார்வதிபுரம் ஏரியில் மூழ்கி, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த முதல்வர் ஸ்டாலினின்அறிவிக்கையில், கடலூர் மாவட்டம், வடலூர், பார்வதிபுரம் கிராமத்தில் வின்சென்ட் அமல்ராஜ் அந்தோணி என்பவரின் மகன் அப்டியல் டெவின் ரோஜர் (17), நேற்று மாலை 5 மணியளவில், வெங்கலத்து ஏரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு, மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Stalin condolence to Cuddalore youngster death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->