Namakkal || இரவு நேரத்தில் பிரைட் ரைஸ், ஷவர்மா.. 13 மாணவர்களுக்கும் நேர்ந்த கதி! ஆட்சியரின் அதிரடி ஆக்ஷன்! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் பரமத்தித்வேலூர் சாலையில் ஐவின் என்ற பெயரில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் பத்திற்கும் மேற்பட்டோர் இரவு உணவு சாப்பிட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் ஷவர்மா, பிரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. 

இந்த உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு இன்று அதிகாலை வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இவர்களில் 6 மாணவிகள், 8 மாணவர்கள் என 13 பேர் அடங்குவர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் தற்போது உடல்நிலை சீரானதாகவும் லேசான காய்ச்சல் மட்டும் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அனைவரும் காய்ச்சலுக்கான சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வருகின்றனர். இது குறித்த தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

இதனை தொடர்ந்து உணவகத்திற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி மற்றும் உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர். இதனை அடுத்து உணவகத்தில் உள்ள அனைத்து உணவு பொருட்களையும் அழித்து உணவகத்திற்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு பெற்றுக் கொண்டது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

District Collector sealed restaurant in Namakkal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->