எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு பின்னால் உள்ள மர்மம்? நேரில் சந்திக்க போகும் ஓபிஎஸ்-டிடிவி!
Devar Guru Pooja 2022 EPS OPS TTV
வருகின்ற 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது பிறந்த நாள் மற்றும் 60வது குருபூஜை விழா நடைபெற உள்ளது.
இதற்காக ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்க அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். அதற்கான அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரின் உத்தரவுப்படி முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் ராமநாதபுரம் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முத்துராமலிங்கர் தேவர் ஜெயந்தி விழாவிற்கு பன்னீர்செல்வம் நேரில் சென்று மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னிற்க்கு செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.
ஒருவேளை முத்துராமலிங்க தேவர் சிலை தங்க கவசம் சம்பந்தமான வழக்கில் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்து இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம் பசும்பொன்னிற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி இருப்பார் என்றும், அப்போது ஓ பன்னீர்செல்வம் பசும்பொன்னிற்கு வந்திருக்க மாட்டார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பசும்பொன்னிற்கு நேரில் சென்று தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு, மரியாதை செலுத்த உள்ளதாக அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
ஒரே நாளில், ஒரே இடத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் வர உள்ளதால் இருவரும் நேரில் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
English Summary
Devar Guru Pooja 2022 EPS OPS TTV