முதலமைச்சராக விஜயின் முதல் கையெழுத்து... 200 யூனிட் மின்சாரம் இலவசம்!
CM Vijays First Masterstroke 200 Units of Free Electricity for All Households
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல் அரசியல் அதிரடியைத் அரங்கேற்றியுள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கையில் தவெக அளித்த மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றான "அனைத்து இல்லங்களுக்கும் மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம்" என்ற திட்டத்தை அமல்படுத்தும் கோப்பிலேயே முதல்வர் விஜய் தனது முதல் கையெழுத்தைப் பதித்தார்.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள சுமார் 2.5 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர் நேரடியாகப் பலன் பெறுவார்கள். இதுவரை 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை 200 யூனிட்டாக உயர்த்தி வழங்கியிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரச் சுமையைக் கணிசமாகக் குறைக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகப் பார்க்கப்படுகிறது.
English Summary
CM Vijays First Masterstroke 200 Units of Free Electricity for All Households