இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்...! நடக்கப்போவது என்ன?
Chief Minister MK Stalin to meet Prime Minister Modi this evening Whats going to happen
மத்திய அரசு ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக ''நிதி ஆயோக்'' கூட்டத்தை நடத்தி வருகிறது.இதன் காரணமாக, இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிக்குழு கூட்டம் தொடங்கியது.

மேலும், 10-வது முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநில முதல்-மந்திரிகள், துணை நிலை கவர்னர்கள், யூனியன் பிரதேச முதல்-மந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதுமட்டுமின்றி, மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
குறிப்பாக இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டது,ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.இந்த நிதி ஆயோக் கூட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புறக்கணித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, இன்று மாலை 4.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.
இதில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர், மாலை 6.30 மணிக்கு டெல்லியில் ஊடக நிருபர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து கேள்விகளுக்கு பதிலளிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Chief Minister MK Stalin to meet Prime Minister Modi this evening Whats going to happen