5 வருட வழக்கில் திடீர் திருப்பம்! அதிமுக பிரமுகருக்கு சிக்கல்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Chennai HC Judgment for mannakudi ADMK Member case
மன்னர்குடி அதிமுக ஊராட்சி ஒன்றியத் தலைவர் மீதான நில மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார் உடன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவரின் அந்த மனுவில், "எனது மாமியார் ஞானம்பாள் இறந்து விட்டதாக போலி இறப்புச் சான்றிதழ் தயாரித்து, எனக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை காண்பித்து, ஆள்மாறாட்டம் செய்து ரூ.20 கோடி மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தை அபகரித்து மோசடியான கிரயப்பத்திரம் செய்துள்ளனர்" என்று அந்த மனுவில் ஆர்.ரோஸ்லின் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மோசடியில் அதிமுக பிரமுகரும், சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவியுமான அமுதா மற்றும் அதிமுக மன்னர்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதாக ஆர்.ரோஸ்லின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலமோசடி குறித்து கடந்த 2017-ம் ஆண்டு மாவட்டக் கண்காணிப்பாளரிடம் ஆர்.ரோஸ்லின் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று ஆர்.ரோஸ்லின் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், அதிமுக பிரமுகர் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், மூன்று மாதத்துக்குள் இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Chennai HC Judgment for mannakudi ADMK Member case