ஏழை பிள்ளைகள் கழிவறைகளை சுத்தம் செய்வதில் என்ன தவறு? முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் கண்டனம்!
BJP Nayinar Condemn to DMK govt mk stalin
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டம் அருகேயுள்ள நமணசமுத்திரம் குடியிருப்பு பகுதியின் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் சின்னஞ்சிறு மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்யும் காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளை ஊதியமில்லா ஊழியர்களாக நடத்தும் திமுக அரசின் குரூர மனப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் மாணவர் விடுதியில் கிணற்றை சுத்தம் செய்த மாணவர் அதில் தவறி விழுந்து பலியான கோரச் சம்பவத்தின் சூடு தணியும் முன்பே, மீண்டும் பள்ளிக் குழந்தைகளைக் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவது என்ன விதமான மனநிலை?
“அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம்” என்று வசனம் பேசிக் கொண்டிருந்த பகுதிநேரப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கண்களுக்கு இந்தக் கொடுமைகள் எல்லாம் தெரியவில்லையா?
பள்ளிக் குழந்தைகளை தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்துவது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகையில், அது எப்படி அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் மட்டும் தங்கு தடையின்றி தூய்மைப் பணியாளர்கள் கிடைக்கிறார்கள்? ஏழை குடும்பத்து பிள்ளைகள் தானே கழிவறைகளை சுத்தம் செய்வதில் என்ன தவறு என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறாரா? இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Nayinar Condemn to DMK govt mk stalin