ஒரு புறம்போக்கு-களவாணி கூட இப்படி கேவலமாக பேச மாட்டான்... உதயநிதியை கைது செய்க.. கொந்தளிக்கும் பாஜக நாராயணன்!
bjp narayanan condemn to dmk udhay
பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தஞ்சாவூரில் திமுகவின் உதயநிதி ஸ்டாலினின் முதலமைச்சர் விஜய் - திரிஷா குறித்த இரட்டை அர்த்த பேச்சு அருவெறுக்கதக்கது, ஆபாசமானது , கேவலமானது, வெட்கக்கேடானது.
உண்மையிலேயே தாய், மனைவி, மகள் உள்ள ஒரு புறம்போக்கு-களவாணி கூட இப்படி கேவலமாக பேச மாட்டான். அப்படி பேசுபவர்களை எந்த தாயும், மனைவியும், மகளும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால் ‘திராவிட மாடல்’ என்று சொல்லிக்கொண்டு கேடுகெட்ட ஜென்மங்கள் இப்படி பொதுவெளியில் பேசுவதை முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது.
மார்க்கண்டேயனை கைது செய்ததை விட இந்த தரங்கெட்ட பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலினை கைது செய்து சிறையிலைடப்பது முதலமைச்சர் விஜய்க்கு பெருமை சேர்க்கும். நீதிமன்றங்கள் இந்த பேச்சுக்கு தண்டனை அளிக்குமா அல்லது பிணை வழங்குமா என்பதை பார்ப்போம்.
English Summary
bjp narayanan condemn to dmk udhay