அதிமுக எம்எல்ஏ,க்கள் இருவர் கைது! - Seithipunal
Seithipunal


அரூர் அருகே உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஆய்வுக்காக வந்த சுற்றுலா மற்றும் சர்க்கரைத் துறை அமைச்சர் ராஜேந்திரனை, அதிமுக எம்எல்ஏக்கள் சம்பத்குமார் (அரூர்) மற்றும் கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி) எதிர்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

“சர்க்கரை ஆலை இணை மின் நிலையத்தில் 40% பணிகள் முடிந்ததாக அமைச்சர் சட்டசபையில் தவறான தகவல் கூறியதாக” கோவிந்தசாமி குற்றம்சாட்டினார்.

அவர், “அது உண்மையெனில் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்; இல்லையெனில் நீங்களே ராஜினாமா செய்யுங்கள்” என அமைச்சரிடம் நேரடியாக சவால் விடுத்தார். இது திமுக ஆதரவாளர்களின் எதிர்ப்பை கிளப்ப, போலீசார் இடையீடு செய்து எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்களை வெளியேற்றினர்.

பின்னர் நடந்த விவசாயிகள் ஆய்வுக் கூட்டத்திலும் அதே விவாதம் தொடர்ந்தது. திமுக, அதிமுகவினர் இடையே பதற்றம் உருவாக, 22 அதிமுகவினர் இரண்டு எம்எல்ஏக்கள் உட்பட போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த சம்பவம் ஆலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arur ADMK MLAs Arrested


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->