#திடீர்திருப்பம் | எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த அதிர்ச்சி! நேரடியாகவே களமிறங்கிய ஓபிஎஸ்!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ பன்னீர்செல்வம் நேரடியாகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை முன்னிலைப்படுத்தி அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுத்துள்ளார்.

மேலும் பொதுச்செயலாளர் தேர்தலை விரைவாக நடத்த திட்டமிட்ட எடப்பாடி பழனிச்சாமி, நேற்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற வேட்பு மனு தாக்களில், எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அவருக்கு ஆதரவாக 219 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று எடப்பாடி பழனிசாமியின் வேட்பு மனு அதிமுக தேர்தல் ஆணையர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அவர் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

அதே சமயத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம். மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை நேற்று அவசர வழக்காக விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.

அதே சமயத்தில் பொதுக்குழு தீர்மானங்கள் மீதான உரிமையியல் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு வருகின்ற 24ஆம் தேதி வெளியிடப்படும், அதுவரை பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஓபன்னீர்செல்வம் இந்த வழக்கை நேரடியாக தாக்கல் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க கோரியும் முறையீடு செய்திருப்பது திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK GS Election OPS Direct case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->