#BigBreaking | ஓபிஎஸ் மனுக்கள் தள்ளுபடி - சற்றுமுன் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! ஒற்றை தலைவர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை கடந்த 22 ஆம் தேதி நீதிபதி குமரேஷ்பாபு சீசரனை செய்தார். முதலில், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். 

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அன்றைய தினமே அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில். வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

கடந்த 24 ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யத நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து,  இடைக்கால நிவாரணம் கேட்ட ஓபிஎஸ்-ன் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK CASE JUDGEMENT 28032023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->