ஆட்சியில் பங்கு: காங்கிரஸ்-திமுக கூட்டணி மோதல்..? எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதிமுக ஆட்சி: "அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது குறை சொல்ல முடியுமா? அ.தி.மு.க.தான் தமிழகத்தில் NDA கூட்டணிக்குத் தலைமை எனத் தெளிவாக அறிவிப்பு வந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.

திட்டங்களை அபகரிப்பு: "அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை, தி.மு.க. அரசு இப்போது ரிப்பன் வெட்டித் திறந்து வைக்கிறது. கோவையில் பல பாலங்களுக்கான திட்டங்களைக் கொண்டு வந்தது அ.தி.மு.க.தான்," என்று அவர் உரிமை கோரினார்.

நிதியற்ற அடிக்கல்: "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிதியே ஒதுக்காமலேயே பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்," எனப் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ்-திமுக கூட்டணி மோதல்..?: "காங்கிரஸ் கட்சி, உங்கள் கூட்டணியில் தங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் எனக் கோருகிறது. ஆனால், தி.மு.க. மறுப்பு தெரிவிக்கிறது," என்று கூட்டணிக்குள் நிலவும் பிளவுகளைச் சுட்டிக்காட்டினார்.

பொய்யான முதலீடுகள்: "77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகத் தி.மு.க. பொய் சொல்கிறது. அதன் மூலம் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துவிட்டதா?" என்று கேள்வி எழுப்பினார்.

குவாரி மிரட்டல்: குவாரி உரிமையாளர்களை மிரட்டி, அவர்களிடம் ரூ.10 லட்சம் தர வேண்டும் என நிர்பந்தம் செய்வதாககவும் குற்றம் சாட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Edappadi Palaniswami DMK congress alliance


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->