#சற்றுமுன் || ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் தேர்தல் தொடங்கியது.!  - Seithipunal
Seithipunal


ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் தேர்தல் தொடங்கியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் தற்போது தொடங்கியுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டாட்சியர் கண்காணிப்பில் தேர்தல் நடந்து வருகிறது.

மதியம்  2:30 அளவில் ஆடுதுறை பேரூராட்சியின் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த 4ம் தேதி விண்ணப்பங்களை உறுப்பினர்கள் சிலர் கிழித்து எரிந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆடுதுறை பேரூராட்சித் தலைவராக பாமகவின் மக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணை தலைவராக அதிமுக உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

aaduthurai election march 23


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->