நாவில் எச்சில் ஊரும் சுவையான கொள்ளு மசாலா.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சூப்பரான சுவையில் நாவில் எச்சில் ஊரும் கொள்ளு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்

கொள்ளு - 1 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை-சிறிதளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு கொள்ளுவை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். இதையடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதையடுத்து உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பிறகு வேக வைத்துள்ள கொள்ளுவை சேர்த்து நன்றாக கிளறி, மசாலா திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கொள்ளு மசாலா ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make tasty Horse gram masala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->