திருமணமான பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய வாலிபர் - சரமாரியாக வெட்டிக் கொலை.! - Seithipunal
Seithipunal


செல்போன் மூலம் டார்ச்சர் கொடுத்த வாலிபர் - சரமாரியாக வெட்டிக் கொலை.!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள, மைசூரில் கபினி அணையின் இடது கரையில் உடல் முழுவதும் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் நேற்று மாலை கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், "கொலை செய்யப்பட்ட நபர் மைசூருவில் உள்ள எச்.டி கோட் தாலுகாவைச் சேர்ந்த பானுபிரகாஷ் என்ற சித்து என்பது தெரிய வந்தது. மேலும், இவர் ஹண்டி கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியதுடன், இரவு நேரத்தில் தொடர்பு கொண்டு பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது தொடர்பாக, அந்த பெண்ணின் குடும்பத்திற்கும், சித்துவின் குடும்பத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அப்பகுதி மக்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளது தெரிய வந்தது.

இந்த நிலையில் சித்து வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதால், போலீஸார் சம்பவம் தொடர்பாக 6 பேர் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth murder in karnataga for message to woman


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->