கோவில் திருவிழாவில் நடனமாடிய இளம்பெண் மயங்கி விழுந்து பலி.! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்கோன் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் சோனம் கோவில் விழாவில் தனது கணவருடன் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். மேடையில் மகிழ்ச்சியாக நடனம் ஆடிக்கொண்டிருந்த அவர், திடீரென்று தடுமாறத் தொடங்கினார். பின்பு சரிந்து கீழே விழுந்து விட்டார். 

நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் எந்த அசைவும் இல்லாமால் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது உறுதியாகியுள்ளது. திருமணம் ஆகிய நான்கு மாதத்தில் இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women died heart attack in madhya pradesh


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->